tamilnadu

img

கேரளத்தில் இன்று 50 லட்சம் பேர் சத்தியாகிரகம்

திருவனந்தபுரம், ஆக.22- கேரளத்தின் கோரிக்கை யை துச்சமென கருதி திரு வனந்தபுரம் விமான நிலை யத்தை அதானியிடம் தாரை வார்க்கும் மத்திய பாஜக அர சின் அணுகுமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஞாயிறன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்தியாகிர கப் போராட்டம் தொடங்குகிறது. கோவிட் காலத்திலும் எல் லையின்றி தொடரும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான பிரச்சாரம் அறிவிக் கப்பட்டிருந்த நிலையில் திரு வனந்தபுரம் விமான நிலை யத்தை விற்றுத் தொலைக்கும் முடிவு வெளியானது. இதற்கு எதிரான மாநிலத்தின் கிளர்ச்சி யின் தொடக்கமாக 50 லட்சம் பேர் பங்கேற்கும் உண்ணா விரதம் நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் லட் சக்கணக்கான வீடுகளிலும் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பு களின் அலுவலகங்களிலும் ஞாயிறு மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை சத்தியாகிர கம் நடைபெறும். சிறந்த கல்வியை சாதாரண மக்க ளுக்கு மறுக்கும் மத்திய அர சின் கொள்கைகளுக்கு எதி ரான போராட்டமாக இந்த சத்தியாகிரகத்தை மாற்ற மாணவர்கள் முடிவு செய் துள்ளனர். கோவிட் ஊரடங்கால் நாட்டில் 1.89 கோடி மக்கள் வேலை இழந்தனர். முறை சார் துறையில் மட்டும் 50 லட்சம் பேர் வேலை இழந்த னர். தொழிலாளர் சட்டங் களை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக் கைக்கு எதிரான வலுவான எச்சரிக்கையாக தொழிலா ளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சத்தியாகிர கத்தில் அணி திரள்கிறார்கள். கோவிட் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர் களைக் கொன்று வருகை யில், சுகாதாரத் துறையில் கூட லட்சக்கணக்கான காலி யிடங்கள் உள்ளன. இளை ஞர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ள மத்திய அர சுக்கு எதிரான போராட்டமாக சத்தியாகிரகம் அமையும். கார்ப்பரேட் சார்பு இ.ஐ.ஏ அறிவிப்புக்கு எதிரான கேர ளத்தின் பொது உணர்வை யும், விவசாய கொள்கை களுக்கு எதிரான விவசாயி களின் கோபத்தையும் இந்த கிளர்ச்சி பிரதிபலிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.